இடுகைகள்

உனக்காக மட்டும்!

உனக்காக மட்டும் எழுதப்படுகிறது என் கவிதைகள்! உனக்காக மட்டும் வாழப்படுகிறது என் வாழ்க்கை! -செல்லா

நீ நடக்கும் தெருக்கள்

படம்
நீ நடக்கும் தெருக்கள் மட்டும் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்படுகின்றன! - செல்லா

இனிய காலை

படம்
இக்காலை இனிய காலை ஆகிறது. உன் இதம் தரும் முத்தத்தால்! ♥️♥️ -செல்லா

அன்னை நீ!

முப்பது வயது குழந்தையைத் தத்தெடுத்த அன்னை நீ!! ♥️♥️ - செல்லா

உயிர்ப்பி! (ஒரு பிரபஞ்சம் கடந்த பயணம்!)

படம்
" பிளிங்க் ! பிளிங்க் ! பிளிங்க் !" இடைவிடாமல் ஒளி சமிக்ஞைகளை (Light Signals) தன்னுடைய கையில் இருந்த எமிட்டரை (Emitter) வைத்து அனுப்பிக்கொண்டிருந்தான் வினய் . சில நிமிட காலம் மட்டுமே திறந்திருக்கும் அந்த வார்ம் ஹோலை (Worm Hole)*   அவன் பயன்படுத்த இது தான் சரியான தருணம் . இதை விட்டுவிட்டால் அடுத்து இதுபோல் ஒரு வார்ம் ஹோலைக் கண்டுபிடிப்பது மிகச்சிரமம் . மிகச்சிரமம் மட்டுமல்ல . ஒருவேளை அவனுடைய ஆயுட்காலத்தில் அது முடியாமல் கூட போகலாம் . அதனால் தன்னால் முடிந்தமட்டும் ஒளி சமிக்ஞைகளை அந்த வார்ம் ஹோலுக்குள் அனுப்பிக் கொண்டிருந்தான் . இடையிடையே தன்னுடைய ரிசெப்டாரில் (Receptor) ஏதேனும் பதில் சமிக்ஞைகள் வருகிறதா என்று கண்காணித்துக்கொண்டே இருந்தான் . " இன்னும் எவ்வளவு நேரம் டா வினய் ?" ஒருவாறாக பொறுமையிழந்து வினய்யின் கவனத்தைக் கலைத்தான் சித்தார்த் . வினய்யின் நண்பன் என்று சொல்வதை விட வினய்யின் நிழல் என்று சித்தார்த்தைக் கூறலாம் . அவ்வளவு தூரம் வினய்யின் நெருங்கிய நண்பனாக இருந்தான் . ஆன...

ஒரு விபரீத விளையாட்டு!

"ஆதி. ஓடு. ஓடு. நிக்காம ஓடு" - என கத்திக்கொண்டே பின்னால் ஓடிவந்தான் நகுல். அவன் பின்னே பரத்தும் இன்பாவும் பின்னங்கால் பிடரியில் படும் அளவு ஓடி வந்துகொண்டிருந்தார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தோம் நால்வரும். மாட்டிக்கொண்டால் உயிர் போவது நிச்சயம். தேவையா இந்தத் தொல்லை எனது தோன்றியது. முதலிலேயே இன்பா வேண்டாம் என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சினான். நாங்கள் இந்தக் காட்டிற்குள் வந்ததும் இல்லாமல் அவனையும் வலிய இழுத்து வந்தோம். இப்போது எல்லோருடைய உயிரும் இந்தக் காட்டுவாசிகளின் கையால் போய்விடும் போல் இருக்கிறது. உயிர் பிழைத்தால் நிச்சயம் இந்தப்பக்கம் வரவே கூடாது என்று தோன்றியது. "ஆஆ. ஹூஹூ! ஹூஹூ! ஹோ. ஹோ. ஹோ" என அலறிக்கொண்டே பின்தொடர்ந்தார்கள் அந்தக் காட்டுவாசிகள். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் துரத்திக் கொண்டு முன்னால் வந்துகொண்டிருந்தான் அவர்களின் தலைவன். அவன் துரத்தி வரும் வேகமும் ஆக்ரோஷமும் பாகுபலியின் காளகேயனைப் போல் இருந்தது. பின்னால் வருபவர்களும் காளகேயனின் கூட்டத்தினர் போலத்தான் இருந்தார்கள். கண்டிப்பாக இவர்கள் கையில் மாட்டிக்கொண்டால் நிச்...

என்ன விதி?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் முத்தம் தராமல் இருப்பது என்ன விதி? -செல்லா