இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஸிகார் பொக்கிஷம் - ஆகாயத்தின் சாவி..!

சமரின் பேச்சை அரசர் நம்ப ஒரு துளியும் தயாராக இல்லை. இருந்தாலும் சமர் சொல்ல ஆரம்பிச்ச விஷயம் பெரிசா இருந்ததால ஒரு கணம் அரசர் யோசிச்சாரு.  மறுபடியும் ஒரு முறை சமர் கிட்ட திரும்ப கேட்டாரு, "உண்மையை சொல்லு. ஆகாயத்தின் சாவி உன்கிட்டயா இருக்கு?" அப்படின்னு. சமர், தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு, ஒரு பெருமூச்சை வாங்கிக்கிட்டு, அழுத்தம் திருத்தமா, இன்னொரு முறை சொன்னான். "ஆமா. ஆகாயத்தின் சாவி என்கிட்டே தான் இருக்கு!"ன்னு "உன்ன நான் எப்படி நம்புறது?" அப்படின்னு அரசர் கேட்க, சமர் தன் இடது கையை மூடியிருந்த சட்டை துணியை விலக்கி கையை நீட்டினான். அரசர் அவன் கையை பார்த்த போது, அவரையே அறியாம அவரோட கண் ஆச்சரியத்தில பெருசா விரிய ஆரம்பிச்சது. அதுவரை பழைய கதைகளிலும், மற்றவர்கள் வாயால சொல்லியும் கேள்விப்பட்ட அந்த விஷயத்தை நேர்ல பார்க்கும் போது, துருப அரசருக்கு ஒரு நிமிடம் அவருக்கு மூச்சே நின்னுடும் போல இருந்தது. சமர் காட்டிய இடது கையில ரொம்ப கருமையான மையால பச்சை குத்தினது மாதிரி அழுத்தமா பதிஞ்சு இருந்தது ஒரு உருவம். தலையின் இரண்டு பக்கமும் காதுகளுக்கு மேல மூணு நாலு ராட்சத

ஸிகார் பொக்கிஷம் - தூக்கு தண்டனை குற்றவாளி..!

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால இந்து மகா சமுத்திரத்தில இருந்த ஆயிரக்கணக்கான தீவுகள்ல மிக முக்கியமான தீவா கருதப்பட்டது தான் யாசிந்தன் மன்னன் ஆட்சி செய்யுற துருப தேசம். தலைமுறை தலைமுறையா நல்லாட்சியையும் மக்களின் நன்மையையும் மட்டுமே மனசில வச்சிக்கிட்டு ஆட்சி செஞ்சுகிட்டு வர்ற அரச குடும்பம் தான், யாசிந்தன் மன்னனுடையது. கண்ணுக்கெட்டுற தூரம் வரை இருக்குற கடலும், இயற்கை வளம் நிறைந்த அந்த தீவும் தான், துருப நாட்டு மக்கள் கட்டிக் காப்பாத்திட்டு வந்த சொத்து. வழி வழியா வந்த முன்னோர்களோட கடல் வாணிப திறமையினாலையும், மூச்சடக்கி கடலுக்குள்ள இறங்கி முத்து பவளம் போன்ற பல ரத்தினங்களை சேகரிச்சு விற்பதனாலையும் பல நாடுகளில் இருந்தும் மக்கள் துருப தேசத்தை நோக்கி எப்போதும் வந்துக்கிட்டே இருப்பாங்க. துருப தேசமும் எப்போவுமே ஒரு பெரிய நகரம் மாதிரி தொழில் வளம் மிகுந்த இடமா இருந்துச்சு. தீவின் நடுவுல பிரம்மாண்டமா உயர்ந்து நிக்கிற மரங்கள் நிறைந்த கோசாரமலை பலவிதமான உயிரினங்களும் வாழ வழிவகை செஞ்சு வச்சிருந்தது. தீவு முழுவதும் பரவிக்கிடந்த தென்னை மரங்களும், வாழை மரங்களும், பலவகையான செடி கொடிகளும் அந்த தீவை எப்போதும

ஸிகார் பொக்கிஷம் - தேடல் ஆரம்பம்..!

முதன் முதல்ல மனுஷன் இந்த பூமியில தோன்றி சுமார் 70 லட்சம் வருஷங்கள் ஆயிருச்சு. ஆரம்பத்துல காடு, மேடு, மலைகள்ல  வாழ்ந்துகிட்டு இருந்த மனுஷன், தன்னை சுத்தி நடக்குற ஒவ்வொரு விஷயத்தை பாத்தும் பயந்துகிட்டே இருந்தான். இடி இடிச்சாலோ, மின்னல் வெட்டினாலோ, மழை வெள்ளம் வந்தாலோ, காடு பத்தி எரிஞ்சாலோ, இல்ல ஏதாவது மிருகம் தன்னை துரத்தினாலோ, மனுஷன் பயந்து ஓடிக்கிட்டே இருந்தான். அவன் பயப்படறதுக்கு அவனை சுத்தி பல விஷயங்கள் அப்போ இருந்துச்சு. தன்னை காப்பாத்திக்க தன்னால என்ன செய்யமுடியுமோ அதெல்லாம் மனுஷன் செய்ய ஆரம்பிச்சான். மத்த மிருகங்கள் எப்படி ஆபத்து நேரத்துல தன்னை பாதுகாத்துக்குதுங்கன்னு பார்த்து அதெல்லாம் செய்ய ஆரம்பிச்சான். மழை வெயில்ல இருந்து தப்பிக்க குகைகள்ல வாழ ஆரம்பிச்சான். மிருகங்களோட தோலை எடுத்து ஆடையா போர்த்திக்கிட்டான். பயமுறுத்துனா பயந்து ஓடக்கூடிய மிருகங்களை சத்தம் போட்டு பயமுறுத்துனான். தன்னை விட பெரிய மிருகங்களை கூர்மையான கற்களை ஆயுதங்களா பயன்படுத்தி விரட்டினான். தன்னால சமாளிக்க முடியாத மிருகங்களை மத்த மனுஷங்களோட சேர்ந்து கூட்டா எதிர்க்க ஆரம்பிச்சான். மிருக மாமிசங்களை மட்டுமே நம்பி வாழ