இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!

"ஆதி. ஓடு. ஓடு. நிக்காம ஓடு" - என கத்திக்கொண்டே பின்னால் ஓடிவந்தான் நகுல். அவன் பின்னே பரத்தும் இன்பாவும் பின்னங்கால் பிடரியில் படும் அளவு ஓடி வந்துகொண்டிருந்தார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தோம் நால்வரும். மாட்டிக்கொண்டால் உயிர் போவது நிச்சயம். தேவையா இந்தத் தொல்லை எனது தோன்றியது. முதலிலேயே இன்பா வேண்டாம் என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சினான். நாங்கள் இந்தக் காட்டிற்குள் வந்ததும் இல்லாமல் அவனையும் வலிய இழுத்து வந்தோம். இப்போது எல்லோருடைய உயிரும் இந்தக் காட்டுவாசிகளின் கையால் போய்விடும் போல் இருக்கிறது. உயிர் பிழைத்தால் நிச்சயம் இந்தப்பக்கம் வரவே கூடாது என்று தோன்றியது. "ஆஆ. ஹூஹூ! ஹூஹூ! ஹோ. ஹோ. ஹோ" என அலறிக்கொண்டே பின்தொடர்ந்தார்கள் அந்தக் காட்டுவாசிகள். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் துரத்திக் கொண்டு முன்னால் வந்துகொண்டிருந்தான் அவர்களின் தலைவன். அவன் துரத்தி வரும் வேகமும் ஆக்ரோஷமும் பாகுபலியின் காளகேயனைப் போல் இருந்தது. பின்னால் வருபவர்களும் காளகேயனின் கூட்டத்தினர் போலத்தான் இருந்தார்கள். கண்டிப்பாக இவர்கள் கையில் மாட்டிக்கொண்டால் நிச்...

என்ன விதி?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் முத்தம் தராமல் இருப்பது என்ன விதி? -செல்லா

என் ஆசை

விழும் மழையெல்லாம் விழுங்கிவிடும் மண்தரையைப்போல், உன் விழிப்பார்வையெல்லாம் விழுங்கிவிட ஆசை...! -செல்லா

விழியீர்ப்பு விசை

புவியீர்ப்பு விசையின் படி, எல்லா பொருட்களும் பூமியை நோக்கி வருமாம்..! உன் விழியீர்ப்பு விசையின் படி, எல்லா இதயங்களும் உன்னை நோக்கியே வரும்..! -செல்லா

கனா வீதி

வீடு கட்டக் கொட்டியிருந்த மணலை வாரி இறைத்து விளையாடிய பொழுதுகளில் வாரி அணைத்துக் கொண்டது அந்த வீதி. விசிறியடிக்கப்பட்ட மணலையும், விழுந்து புரளும் எங்களையும்..! - செல்லா

சட்டை

எதிர்வீட்டு சுடிதார் காதலியிடம், கையசைத்துக் கவிதை பேசுகிறது, காற்றில் ஆடும் சட்டை..! -செல்லா

பாட்டியின் சமையல்

மழலைகால நினைவுகளையும் சேர்த்தே பரிமாறுகிறது, பாட்டியின் சமையல்..! -செல்லா