எங்கே இருக்கிறாய் நண்பா! உறவு சுடுகிறது! காதல் கொல்கிறது! துரோகம் துரத்துகிறது! ஆசை அலைக்கழிக்கிறது! விழிகளில் கண்ணீர் ததும்பி நிற்கிறது! மனதில் பாரம் நிரம்பி இருக்கிறது! ஆறுதல் சொல்லவோ, அன்பு காட்டவோ ஆளின்றித் தவிக்கிறேன். அருகில் நீ இல்லாததால்........! என் இன்பத்தை உன் இன்பமாய் , என் ஏக்கம் புரிந்த நீ எங்கே......? என் வலியை அறிந்த நீ எங்கே.....? என்னை என்னாய் உணர்ந்த நீ எங்கே.....? காலத்தின் கைகளில் சிறைப்பட்டு, கண்ணீருக்குள் கரைந்து காணமல் போகும்முன், என்னைக் காப்பாற்ற வருவாயா......? எங்கே இருக்கிறாய் நண்பா.......! -செல்லா