இடுகைகள்

நவம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கனா வீதி

வீடு கட்டக் கொட்டியிருந்த மணலை வாரி இறைத்து விளையாடிய பொழுதுகளில் வாரி அணைத்துக் கொண்டது அந்த வீதி. விசிறியடிக்கப்பட்ட மணலையும், விழுந்து புரளும் எங்களையும்..! - செல்லா

சட்டை

எதிர்வீட்டு சுடிதார் காதலியிடம், கையசைத்துக் கவிதை பேசுகிறது, காற்றில் ஆடும் சட்டை..! -செல்லா

பாட்டியின் சமையல்

மழலைகால நினைவுகளையும் சேர்த்தே பரிமாறுகிறது, பாட்டியின் சமையல்..! -செல்லா

தண்ணீர்க்குழாய்

தாகத்தில் தவிப்பவனை எண்ணி அழுகிறது. ஒழுகும் தண்ணீர்க்குழாய்..! -செல்லா