இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்ன விதி?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் முத்தம் தராமல் இருப்பது என்ன விதி? -செல்லா

என் ஆசை

விழும் மழையெல்லாம் விழுங்கிவிடும் மண்தரையைப்போல், உன் விழிப்பார்வையெல்லாம் விழுங்கிவிட ஆசை...! -செல்லா

விழியீர்ப்பு விசை

புவியீர்ப்பு விசையின் படி, எல்லா பொருட்களும் பூமியை நோக்கி வருமாம்..! உன் விழியீர்ப்பு விசையின் படி, எல்லா இதயங்களும் உன்னை நோக்கியே வரும்..! -செல்லா

கனா வீதி

வீடு கட்டக் கொட்டியிருந்த மணலை வாரி இறைத்து விளையாடிய பொழுதுகளில் வாரி அணைத்துக் கொண்டது அந்த வீதி. விசிறியடிக்கப்பட்ட மணலையும், விழுந்து புரளும் எங்களையும்..! - செல்லா

சட்டை

எதிர்வீட்டு சுடிதார் காதலியிடம், கையசைத்துக் கவிதை பேசுகிறது, காற்றில் ஆடும் சட்டை..! -செல்லா

பாட்டியின் சமையல்

மழலைகால நினைவுகளையும் சேர்த்தே பரிமாறுகிறது, பாட்டியின் சமையல்..! -செல்லா

தண்ணீர்க்குழாய்

தாகத்தில் தவிப்பவனை எண்ணி அழுகிறது. ஒழுகும் தண்ணீர்க்குழாய்..! -செல்லா

சருகுகளல்ல யாம்

நசுக்கும் கால்களுக்குத் தெரிவதில்லை. கருகிச் சாக நாம் சருகுகளல்ல. விருட்சமாய் வெகுண்டெழும் ஆலமர விதைகளென..! செல்லா

புதுக்குறள்

வஞ்சம் யார்க்கும் எளிய! அரியவாம் நெஞ்சில் உறுதி கொளல். செல்லா

விநாயகர் வேண்டுதல்

உன் வேண்டுதலுக்காகக் கொழுக்கட்டை பிடித்து பிள்ளையாருக்குப் படிக்கிறாய் ஊர்க்கோவிலில். நீ பிடித்த கொழுக்கட்டை முதலில் படைக்கப்பட வேண்டி வேண்டிக்கொள்கிறார் பிள்ளையார்..! -செல்லா

காதலிப்பிரவேசம்

ஒரு விடுமுறை நாளில் என் அறைக்கு வந்து என் சமையலை ருசித்துவிட்டு சிரிக்க சிரிக்க கதைபேசிவிட்டு சிறிதொரு தருணத்தில் முறைத்துவிட்டு "படம் பாக்கலாம் வா" என அருகே அமர வைத்துவிட்டு கையைக் காட்டிக்கொண்டே கண்ணயர்ந்து போனாய் என் தோளில். கண்ணிமைக்க மறந்துபோய் காதலிக்கலானேன் நான்..! -செல்லா

பிய்ந்த செருப்பு

பள்ளிக்குச் செல்கிறது குழந்தை. பரிசாய் அப்பனின் காலில் கிடக்கிறது "பிய்ந்த செருப்பு" -செல்லா

ஓர் இனிய நாளில்

முன்பின் அறியா முதியவரின் சிரிப்பும், "மிச்சம் இந்தப்பா" என நீளும் நடத்துனரின் கைகளும், கவனமாய்த் துரத்திவந்து கத்திப் போகும் "சைட் ஸ்டாண்ட்" களும் வாரி இறைத்துப் போகிறது, சில தூசிகளையும் பல நல்லுள்ளங்களையும்..! -செல்லா

வாழ்க்கை

வெறுத்துவிட்டு ஓடத்துவங்கும் நாட்களில், முன்னே வந்து பழித்துக் காட்டுகிறது வாழ்க்கை..! "என்னை விட்டு எங்கே செல்வாய்" என..! - செல்லா

கவிதைப் படையெடுப்பு

மௌனத்தின் உறக்கங்கள் கிழித்து மற்போர் புரியும் அந்த மூன்றாம் ஜாமத்துக் கவிதைகள், வென்று குவிக்கின்றன எண்ணிலடங்கா உள்ளங்களை..! -செல்லா

பொறு மனமே

புல்மேல் பனியாய் பொறு மனமே. புவி சேர்வதோ விண் போவதோ நிச்சயிக்கட்டும் காலம்..! - செல்லா