இடுகைகள்

ஜூன், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிரித்திருந்த பொழுதுகள்

சேர்ந்து சிரித்திருந்த போது, நினைக்கவே இல்லை. உன் நினைவுகள் என் வாழ்வை இவ்வளவு அழகாக்குமென்று...!  :-) :-) :-) #மிஸ்ஸிங்_மை_பிரண்ட்ஸ் -செல்லா

குட் மார்னிங்

ஒரு குறுந்தகவலில் 'குட் மார்னிங்' என்று சொல்லிவிட்டாய். இப்போதுபார், இந்தக் காலைவேளை நகரமாட்டேன் என அடம்பிடிக்கிறது...! -செல்லா

ஒரு பயணம்

ஒரு வழியாக நான் அந்த குளிர்சாதனப் பேருந்தில் ஏறியிருந்த போது, மழை வலுத்திருந்தது. காற்றின் அசாத்திய வேகமும், இடியின் ஓலமும், மழையின் தீவிரமும் பேருந்தின் கூரையைப் பிளந்துகொண்டு உள்ளே வந்துவிடவா என்று கேட்டுக்கொண்டிருந்தது. யார் மீது என்ன கோபமோ அவைகளுக்கு? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பயணச்சீட்டை வாங்கிவிட்டுக் காலியாய் இருந்த ஓர் இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டேன். முக்கால்வாசி மட்டுமே நிரம்பியிருந்த பேருந்தில் அமர்வதற்கு நிறைய இடம் இருந்தது. சில பெரியவர்கள் தங்கள் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். நடுத்தர வயதைத் தொட்டிருந்த சிலரோ, எதையோ எண்ணிச் சிந்தித்துக்கொண்டும், மொபைல் போனில் பேசிக்கொண்டும் இருந்தனர். என் வயதையொத்த சில யுவ, யுவதிகள் தங்கள் காதுகளை 'இயர் போனில்' சிறை வைத்திருந்தனர். சில காதல் ஜோடிகள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துகொண்டு மழையை அணு அணுவாய் ரசித்துக்கொண்டிருந்தனர். நடந்துகொண்டிருந்த இந்த அத்தனை நிகழ்வுகளுக்கும் சிறிதும் பொருத்தம் இன்றி என் மனதோடு போராடிக்கொண்டிருந்தேன் நான். மூளைக்குள் குடைந்துகொண்டிருக்கும் அந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியவ