இடுகைகள்

ஏப்ரல், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ

படம்
முதல் முறையாய்  அமைதியாகிப்போனது நம் வீடு இந்த இருபத்தைந்து வருடங்களில்..! வாசலை அடைத்தபடி நிலைக்கதவில் யாரும் தொங்கிக்கொண்டிருக்கவில்லை 'என் அறை உள்ளே வராதே' என என்னை விரட்ட ஆளில்லை சமைக்கும் நேரமெல்லாம் அம்மாவின் அருகே நின்று கதைபேச ஆளில்லை இரவில் தான் சாப்பிடும்முன் அம்மாவிடம், 'அவன் சாப்பிட்டானா?' என அப்பா கேட்பதில்லை. எல்லாம் உன்னால் தான். உன் ஒருவனாலே தான். வெளிநாடு கிளம்பிய உன்னை விமான நிலையம் வந்து வழியனுப்பியவரை யோசிக்கவே இல்லை  இத்தனையும் நடக்குமென்று..! யாரோ சொன்னார்கள் 'முதல் பிள்ளை பெண்ணாயிருந்தால் இரண்டாவது பிள்ளைக்கு இரண்டு தாய்' என..! யாருமே சொல்லவில்லை 'முதல் பிள்ளை ஆணாயிருந்தால் இரண்டாவது பிள்ளைக்கு இரண்டு தந்தை' என..! மருத்துவமனையில் நான் பிறந்திருந்தபோது, மடியில் என்னைத் தூக்கிவைத்துக்கொண்டு, 'என் தங்கச்சி. நான் யாருக்கும் தரமாட்டேன்' என ஐந்து வயதில் நீ செய்த அந்த  அழகான அட்டூழியம் தான், அம்மாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட உன்னைப்பற்றிய முதல் நினை