இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் கண்கள்

எதற்காக என்னிடம் இருக்கின்றன இந்த இரு கண்கள், எங்கு நீ சென்றாலும் அவை உன்னைப் பின்தொடரும் போது? -செல்லா

சவால்

எனக்கு உலகிலேயே மிகப்பெரிய சவால், தினமும் உன்னைக் கடக்கும் போது, உன் கண்களைப் பார்த்தபின்னும் உன்னிடம் காதலைச் சொல்லாமல், காலை வணக்கம் மட்டும் சொல்லிப் போவது தான்..! -செல்லா

எப்படி செய்வது காதல்?

'யூ ஆர் சோ ஸ்வீட்' என்றால், 'ஹலோ. சிக்னல் சரியா கெடைக்கல' என்கிறாய். போடா உன்னை வைத்துக்கொண்டு எப்படித்தான் காதல் செய்வதோ..! -செல்லா

உன்னால் மட்டுமே

உன்னால் மட்டுமே அழகாக்க முடிகிறது ஒரு 'ச்சீ'யையும், 'போடா'வையும்... :) -செல்லா 

விளையாடும் காதல்

வேண்டுமென்றே 'பிரதர்' என்றழைக்கிறாய் நீ! - உன் விருப்பத்திற்காகவே பொய்க்கோபம் கொள்கிறேன் நான்! சீண்டலையும் கோபமாயும் விளையாட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறது காதல் -செல்லா

ஏன் பிறக்கவில்லை

ஏன் நாய்க்குட்டியாய்ப் பிறக்கவில்லை என்று தோன்றுகிறது, அத்தனை கொஞ்சலாய் நீ, "என்னடா குட்டிமா" என்று கொஞ்சும் போது..! -செல்லா

நிரப்ப முடியா காதல்

மொழிகளால் நிரப்பமுடியாத காதல்களைஎல்லாம் ஏனோ, இந்த 'ம்ம்ம்ம்ம்', 'அப்புறம்' நிரப்பிவிடுகிறது..! -செல்லா

இரு தேவதைகள்

படம்
நிரம்பி வழிந்துகொண்டிருந்தது அந்த மருத்துவமனை பெயர் சொல்லத்தெரியாத மருந்துகளின் வாசத்தால்! மழித்துத் துடைக்கப்பட்டிருந்த சலவைக்கல் தரையாய் சலனமின்றிக்கிடக்கிறது என் மனம். இன்னும் என்ன இருக்கிறது? என்ன மிச்சம் இருக்கிறது? எல்லா எதிர்பார்ப்புகளும் எல்லாக் கனவுகளும் காற்றோடு காற்றாய் கரைந்த பின் இன்னும் மிச்சமென்ன இருக்கிறது! ஒரு மகள், ஒரே மகள். இல்லை இல்லை! ஒரே தேவதை. ஒரே தெய்வம். அப்படித்தான் அவள் எனக்கு! மூவேழ் ஆண்டுகட்குமுன், ஒரு தேவதைத்திருநாளில், பூமியில் வந்து அவதரித்தாள் அவள்! ஒரு ஆண்மகன் என என்னையும், ஒரு அன்னை என என் மனைவியையும் ஊரறிய அறிவிப்பதற்காக..! அன்று, அந்த நன்னாளில், அவ்வழகிய நேரத்தில், பத்துமாதம் சுமந்த சுகத்தை இறக்கிவைத்தக் களிப்பிலோ என்னவோ, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள் என் மனைவி. அழகாய்த் தூங்கிக்கொண்டிருந்தாள் என் மகள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரும்பிக்கொண்டிருந்த கேசம், சிறுமொட்டாய் மூடிக்கிடக்கும் கண்கள், சிறு இதழ், அதில் குறு நகை, கனவிலும் கூட கடவுளிடம் பேசும் கை கால்கள், வெண்பஞ்சாய் வெளுத்திருந்த தேகம்! அவ்வப்போது

நீ

படம்
முதல் முறையாய்  அமைதியாகிப்போனது நம் வீடு இந்த இருபத்தைந்து வருடங்களில்..! வாசலை அடைத்தபடி நிலைக்கதவில் யாரும் தொங்கிக்கொண்டிருக்கவில்லை 'என் அறை உள்ளே வராதே' என என்னை விரட்ட ஆளில்லை சமைக்கும் நேரமெல்லாம் அம்மாவின் அருகே நின்று கதைபேச ஆளில்லை இரவில் தான் சாப்பிடும்முன் அம்மாவிடம், 'அவன் சாப்பிட்டானா?' என அப்பா கேட்பதில்லை. எல்லாம் உன்னால் தான். உன் ஒருவனாலே தான். வெளிநாடு கிளம்பிய உன்னை விமான நிலையம் வந்து வழியனுப்பியவரை யோசிக்கவே இல்லை  இத்தனையும் நடக்குமென்று..! யாரோ சொன்னார்கள் 'முதல் பிள்ளை பெண்ணாயிருந்தால் இரண்டாவது பிள்ளைக்கு இரண்டு தாய்' என..! யாருமே சொல்லவில்லை 'முதல் பிள்ளை ஆணாயிருந்தால் இரண்டாவது பிள்ளைக்கு இரண்டு தந்தை' என..! மருத்துவமனையில் நான் பிறந்திருந்தபோது, மடியில் என்னைத் தூக்கிவைத்துக்கொண்டு, 'என் தங்கச்சி. நான் யாருக்கும் தரமாட்டேன்' என ஐந்து வயதில் நீ செய்த அந்த  அழகான அட்டூழியம் தான், அம்மாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட உன்னைப்பற்றிய முதல் நினை

ஒரு வெட்டி(பையன்) கதை

இந்தக் கதையின் நாயகன், நாயகன் அப்படின்னுலாம் சொல்ல முடியாது. கதையோட கரு (ஓவரா பேசுறேன்ல) என்னை சுத்தி இருக்குறதுனால, ஒரு வகையில என்னை பத்தின கதைன்னு வச்சுக்கலாம். ங்கொய்யால நீயெல்லாம் ஹீரோவா அப்டின்னு நீங்க கேக்குறது தெரியுது. ஆனாலும், உங்களுக்கு வேற வழி கெடையாது. இந்தக் கொடுமையெல்லாம் நீங்க அனுபவிச்சுத் தான் ஆகணும். என்னை சுத்தி நடக்கவே நடக்காத விஷயங்கள வச்சு ஒரு கதை எழுதலாம்னு நெனச்சப்பதான் இந்த ஐடியா வந்துச்சு. இந்தக் கதை நல்லா இருக்குனு நெனச்சிங்கன்னா, இன்னொரு கதை எழுதி உங்கள சந்தோஷ(???)ப்படுத்துவேன். மொக்கையா இருக்குனு சொன்னிங்கன்னா, நல்லா இருக்குனு நீங்க ஒத்துக்குற வரை கதையா எழுதி சாவடிப்பேன். என்ன பண்லாம்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க.... ;) ஓகே. லெட்ஸ் ஸ்டார்ட் தி கதை. பகுதி-1: ஆபிஸ் அலப்பரை இன்னையில இருந்து சரியா ஒரு வருஷம் மூணு மாசத்துக்கு முன்னாடி, ஏதோ ஒரு நாள்....! வழக்கம் போல, என்னோட ரெட் கலர் அபாச்சி பைக்க பார்க்கிங் ல போட்டுட்டு இன்னிக்கி என்ன வில்லங்கத்த சந்திக்கப் போறோமோன்னு ஒரு பீதியோடையே ஆபிசுக்குள்ள நுழைஞ்சேன். ஆக்சஸ் கார்ட எடுத்து கதவுகிட்ட காட்டிட்டு, தி

மொழிய முடியா இக்கணம்

படம்
இன்று தான் கேட்கிறேன்  அந்த வார்த்தையை அந்த முதல் வார்த்தையை நீ என்னிடம் சொல்ல எண்ணிய அந்த முதல் வார்த்தையை பட்டுக்குரலெடுத்து பளிங்குபோல் மிருதுவாக அலைபேசியின் வாயருகில் அழகான உன் பூவிதழ்பதித்து அடுக்கடுக்காய் எழுத்துகளை அச்சுப்பிசகாமல் கோர்த்துவைத்து மெல்லிய சிறு இடைவெளியில் மெதுவாக, மென்மையாக, "மாமா" என நீ அழைத்தது. இது தானா! இது தானா அந்த நிமிடம்! எத்தனை நாள், எத்தனை நாள் ஏங்கியிருப்பேன் இந்த வார்த்தையைக் கேட்க..! எத்தனை தடவை திண்டாடியிருப்பேன் உன்னைப் பேசவைக்க..! எத்தனை நிமிடங்கள் காத்திருந்திருப்பேன் உன் குரலைக் கேட்டிருக்க..! எத்தனை முறை போராடித் தோற்றிருப்பேன் உன்னை, என் பெயரைச் சொல்லவைக்க..! ஆனால், இன்று, யாருமே சொல்லித்தராமல், எந்த போராட்டமும் இல்லாமல் நீ அழைக்கிறாய் நீயாக அழைக்கிறாய் என்னை..! முதல் முறையாக..! ஆனால் முழுவதுமாக..! "ஆங்" "மாமா" "மாமா" "மம்மா" "மாமா" "மாமா.. அக்கு" "அம்மா... மாமா" "மாமாகு" அந்தக் கீச்சுக்குரலுக்குள் ஒளிந்திருந்து வெளிவரும் அத்தனை வார்த்தைக்குள்ளும்

காதல் நிச்சயிக்கப்பட்டுவிட்டது

படம்
இன்றும் நினைவிருக்கிறது, பெண்பார்க்கும் படலத்தில் என்னிடம் தனியே பேச, என் தந்தையிடம் அனுமதி வாங்கியது...! பெரியோர்கள் சம்மதத்துடன், பேசவந்தாய் என்னிடம் முதன்முதலில்...! தனியறை. தொலைவில் உறவுகள். அமைதியான சூழல். அருகில் நீ. எவ்வளவோ சொல்லியும் கேளாமல் எகிறத்தொடங்கியது இதயத்துடிப்பு உன் அருகாமை கண்டு...! "உங்க பேர் என்ன?" "என்ன படிச்சிருக்கிங்க?" "என்னென்னன புடிக்கும் உங்களுக்கு?" "என்னைப் பிடிச்சிருக்கா?" எத்தனை கேள்விகள் எழுதிவைத்தேன் மனதில்..! எல்லாம் மறந்தது இன்று உன் அருகில்..! பாழாய்ப்போன உதடுகள், உன்னைப் பார்த்ததும்தானா மூடிக்கொள்ளவேண்டும்...? தடுமாறி நின்றபோதுதான் தெரிந்தது, என் தவிப்புகள் உன்னால் ரசிக்கப்படுகிறது என்று...! பத்துநாளாய் புகைப்படத்தில் நான் ரசித்த கண்கள், பக்கத்தில் நின்று என்னை ரசிக்கும்போது, தடுமாறித்தான் போனது, என் தைரியமான மனமும்...! ஆசையோ கட்டிக்கொள்ளச் சொல்ல, நாணமோ எட்டித் தள்ள, வேண்டாம் என்று சொல்லியும், முகத்தில் வெட்கமாய் பூத்துவிட்டிருந்தது காதல்...! தவிக்க விட்டது போதும் என்றெண்ணியோ, தன்னால் கேட்டாய், "எனக

வெட்கம்

படம்

காதலின் அடையாளம்

படம்