சௌந்திரபாண்டி


மேஜையின் மீது வைக்கப்படிருந்தது மிக நேர்த்தியாக மடிக்கப்பட்டிருந்த அந்த சேலை. அதன் நேர்த்தியே சொல்லிற்று, கண்டிப்பாக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கவேண்டும் என்று. தனக்கு சேலையும், மகளுக்கு சுடிதாரும் வாங்கி வந்திருக்கும் மகன், தன்

கணவருக்கு எதுவும் வாங்கி வரவில்லையே என்று வருத்தப்பட்டாள் கோமதியம்மாள். அவரைப்பற்றி பேச ஆரம்பித்தாலே கோவப்படுவான் என்று தெரிந்தும், ஒருவித தயக்கத்தோடு ரவியிடம் கேட்டாள், "ஏம்பா. மொத மாச சம்பளத்துல அப்பாவுக்கு எதுவும் வாங்கிட்டு

வரலியா?" என்று.

"தினம் தினம் என்னை தண்ட சோறுன்னு, தரித்திரம், உருப்புடாதவன்னு திட்டுவாரு அந்த ஆளு. அவருக்கு நான் வாங்கிதரனுமா? பேசாம போம்மா. நான் எதாவது சொல்லிடப் போறேன்." பொரிந்து தள்ளினான் ரவி.

நடந்து கொண்டிருந்த களேபகரங்கள் அத்தனையும் மெளனமாக வேடிக்கை பார்த்துவிட்டு, ரவியின் அப்பா, சௌந்திரபாண்டி எதுவும் பேசாமலேயே வெளியில் கிளம்பினார்.

சிறிது நேரம் கழித்து, டீ கடையில்,

"என்ன சௌந்திரபாண்டி, பையன் வேலைக்கு போயி இன்னையோட ஒரு மாசம் ஆச்சே. மொத மாச சம்பளத்துல என்ன வாங்கிக் குடுத்தான்?" என்றார், சௌந்திரபாண்டியின் நண்பர், சிவசு.

"அவங்க அம்மாவுக்கு எட்டாயிரம் ரூபாயில, ஒரு பட்டுப்புடவை வாங்கிட்டு வந்தான் சிவசு. எவ்வளவு அருமையா இருக்குது தெரியுமா?" - சௌந்திரபாண்டி

"க்கும். உனக்கு ஏதும் வாங்கிட்டு வரலயாக்கும்?" - சிவசு.

"பட்டு சட்டை வேஷ்டி எடுத்து தர்றேன்னு தான் சொன்னான். நான் தான் வேணான்னு சொல்லிட்டேன். காலம் போன கடைசியில, இப்போ நம்ம பட்டு சட்டை போடலைன்னு தான் கவலையாக்கும். அவன் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டான். அவன் தான் நாலு சட்டை

டவுசரு நல்லா போட்டுக்கணும். அதான் அவனுக்கு டிரஸ் எடுத்துக்க சொல்லிருக்கேன்." - சௌந்திரபாண்டி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!