இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏன்?

படம்

என் பிரசவம்

படம்
 

அம்மாவுக்கு பிடித்தது

எத்தனையோ அம்மாக்களுக்கு, பிள்ளைகளுக்குப் பிடிக்கும் அனைத்தும் தெரியும். ஆனால், எத்தனை பிள்ளைகளுக்கு அம்மாவுக்குப் பிடிக்கும் அனைத்தும் தெரியும்? -செல்லா

முந்நூறு பக்கங்கள்

முந்நூறு பக்கங்கள் எழுதிவிட்டேன். ஆச்சரியமாக இருக்கிறது! எப்படி முந்நூறு பக்கங்கள் எழுதினேன் என்றல்ல. எப்படி முந்நூறு பக்கங்களிலும் உன்னைப்பற்றியே எழுதினேன் என்று! -செல்லா 

நீதான் வேண்டும்

நீதான் வேண்டும் என அழுது அடம்பிடிக்கிறது என் காதல், அம்மா தான் வேண்டும் என அழுது அடம்பிடிக்கும் குழந்தைபோல! -செல்லா

மழைக்கால ஞாபகங்கள்

மழைக்கால ஞாபகங்கள்: நனைக்கக் காத்திருந்தது மழை! நனையச் சொன்னது மனது! உதடு உணரும்முன் உதிர்ந்தன வார்த்தைகள், "அம்மா! மழை வருது! மாடிக்கு போய் துணிய எடுத்துட்டு வந்துடறேன்!" என்று உயிர் கரைக்கும் மழையோடு உறவாடித் திரிந்தது உடல்....! உள்ளம் மகிழ்வித்த மழை ஊர் தாண்டும் போது, உதடுகள் உளறியது "ச்சே! இன்னும் கொஞ்ச நேரம் பெய்திருக்க கூடாதா!" மழை நின்ற பின் தான் மண்டையில் உறைத்தது, இல்லாத துணியை எடுப்பதற்காக, மாடிக்கு வந்திருப்பது! தயங்கி தயங்கி கீழிறங்கி வந்தபோது, தயாராக நின்றிருந்தார் அம்மா கேள்வி கேட்க! "இன்னிக்கி நான் துணி துவைக்கலையே! எந்த துணிய எடுத்துட்டு இப்படி நனைஞ்சு வர்ற?" அசடு வழிய சிரித்துக்கொண்டு அறிவில்லாமல் பொய்சொன்னேன், "துணி காய வச்சுருக்கிங்களோனு நெனச்சு பார்க்க போனேன் அம்மா" சிரித்திக்கொண்டே வந்த அம்மாவிடம் சிக்கிக்கொண்டன என் காதுகள்! "இன்னொரு தடவை பொய் சொல்லுவ?" என்று இறுக்கினார் என் காதுகளை! வலியைப் பார்த்ததும் வந்தன வார்த்தைகள், "இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் அம்மா!" என்று இப

இளையராஜா பாடல்

எங்கேயோ ஒலிக்கும் இளையராஜா பாடல்  தருகிறது, இங்கே இல்லாத அம்மாவின் அரவணைப்பை.....! -செல்லா 

பாவம் இந்த மக்கள்

படம்

என் காதல்

இப்போதே என்னை முழுதும் காதலித்துவிடாதே. திருமணத்திற்குப் பின் காதலிக்க கொஞ்சம் மிச்சம் வை உன் காதலை, என்கிறாய்...! அடி பெண்ணே...! திருமணத்திற்குப் பின் தானே உன்னை காதலிக்கவே ஆரம்பிக்கப் போகிறேன்...! -செல்லா

உன் பெயர்

என் டைரி செய்யும் அட்டூழியத்தைப் பார்.....! எல்லா பக்கத்திலும் உன் பெயரையே  எழுதச் சொல்லி  அடம்பிடிக்கிறது.....! -செல்லா