இடுகைகள்

நவம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னைப்போல் ஒருவன்

தியாகராய நகரின் பரபப்பான வீதிகளைப் பற்றித் தெரிந்தவர்கள், ஞாயிற்று கிழமை பொழுதை அங்கு கழிக்க விரும்ப மாட்டார்கள். அளவு கடந்த கூட்டமும், வாகன இரைச்சலும் மண்டிக்கிடக்கின்ற அந்த தெருக்களில், தண்ணீராய் பணத்தை செலவழிப்பவர்கள் மட்டுமே ராஜ போகம் பெறுகிறார்கள். பலரின் நிலைமை, மிட்டாய் கடையை வேடிக்கை பார்க்கும் குழந்தை போல தான். அது சரி. இப்போது எதற்கு இந்த தேவையில்லாத விமர்சனம்? நான் சொல்ல வந்த விஷயமே வேறு. சமீபத்தில் திருமணமான, என் சகோதரியை (பெரியம்மா மகள்) காண தியாகராய நகர் செல்ல வேண்டி இருந்தது. பார்த்து விட்டு வரும் வழியில், ஒரு நபரை சந்திக்க நேரிட்டது. என்னுள் ஒரு புது மாற்றத்தை ஏற்படுத்தியவர் இவர். பெயர் வெளியிட விரும்பாத இந்த நண்பர், (நாம் குமார் என்று வைத்துகொள்வோமே) என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் சற்றே ஆச்சர்யத்தையும், பெருமளவு மாற்றத்தையும் என்னிடம் ஏற்படுத்தியது. மகிழ்ச்சியாக பேசிய இவரின் வாழ்க்கை, மகிழ்ச்சியாக இல்லை. குமார் சிறுவயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். இதனால், இவரது கால்கள் தன் செயல்பாட்டை இழந்தன. வேலை பறி போனாலே வாழ்வு முடிந்ததாக நினைக்கும் பலர் மத்தியில், தன