குடும்பம்

அன்று
அன்பான காதலும்
அழகான குறிக்கோளும்
அமைதியாக வாழ்ந்தன என் இதயத்தில்.......!

இன்று
என் கையாலேயே என் இதயம் நசுக்கப்படுகிறது.
என் கனவுகள் நொறுக்கப்படுகின்றன.
என் ஆசைகள் அழிக்கப்படுகின்றன.
எல்லாம் என் குடும்பத்திற்காக.......!

வாழ்நாள் குறிக்கோளும்
வாசல் தேடி வந்த காதலும்
வழி மாறி போன பின்னும்,
அழ மனம் வரவில்லை.
 என் கண்ணீராவது என்னுடன் இருக்கட்டுமே என்கிற நப்பாசையில் தான்.......!

-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!